Friday, February 12, 2010

மதனோற்சவம் ரதியோடுதான்

படம்: சதுரங்கம்.

பாடியவர்கள்: பாலா:வாணிஜெயராம்..

ஆண்: மதனோற்சவம் ரதியோடுதான்
ரதிதேவியோ பதியோடுதான்
பெண்: உயிரோவியம் உனக்காகத்தான்
உடல் வண்ணமே அதற்காகத்தான்

ஆண்: மீனாடும் கண்ணில் விழுந்து நான் ஆடவோ
தேனாடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ
மீனாடும் கண்ணில் விழுந்து நான் ஆடவோ
தேனாடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ
பெண்: புரியாத பெண்மை இது பூபோன்ற மென்மை இது
பொன் அந்தி மாலை...என்னென்ன லீலை

ஆண்: மதனோற்சவம் ரதியோடுதான்
பெண்: ரதிதேவியோ பதியோடுதான்

பெண்: கார்கால மேகம் திரண்டு குழலானது
கண்ணா உன் கையில் புரண்டு சதிராடுது
கார்கால மேகம் திரண்டு குழலானது
கண்ணா உன் கையில் புரண்டு சதிராடுது
ஆண்: ஓ...அலங்கார தேவி முகம் அடங்காத ஆசை தரும்
ஒன்றான நேரம்...ஒரு கோடி இன்பம்

ஆண்: மதனோற்சவம் பெண்: ம்ம்ம்...ரதியோடுதான்
ஆண்: ஆஆஆ...ரதிதேவியோ பெண்: பதியோடுதான்


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=13204

No comments:

Post a Comment