பாடகர்கள்: ஜேசுதாஸ்,வாணிஜெயராம்.
வரிகள்:கண்ணதாஸன்.
பெண்: அன்பு மேகமே இங்கு ஓடிவா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா
ஆண்: அன்பு தேவியே எந்தன் ஆவியே
உந்தன் கண்ணுக்குள் ஆடவா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூற வா
பின்னணி இசை2:
சரணம்1:
பெண்: கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
ஆண்: பொன்வண்ண மேகங்கள் பேர் சொன்னதா
பூமாலை நான்சூடும் நாள் வந்ததா
நான் நீயன்றோ நீ நானன்றோ
பெண்: எனது மயக்கம் தெளிந்ததா
அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
ஆண் : அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூற வா
பின்னணி இசை 3 :
சரணம் 2 :
பெண்: காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கைசேர்க்க வந்தது உறவு
காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கைசேர்க்க வந்தது உறவு
ஆண்: சந்திரன் இங்கு சாட்சி உண்டு
சங்கமம் ஆகும் காட்சி உண்டு
பெண்: போ மன்றமே வா நெஞ்சமே
ஆண் புதிய உலகம் பிறந்தது
பெண்: பழைய கனவு மறைந்தது
அன்பு மேகமே இங்கு ஓடிவா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=13212
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment