Friday, February 12, 2010

அன்பு மேகமே இங்கு ஓடிவா

பாடகர்கள்: ஜேசுதாஸ்,வாணிஜெயராம்.
வரிகள்:கண்ணதாஸன்.

பெண்: அன்பு மேகமே இங்கு ஓடிவா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

ஆண்: அன்பு தேவியே எந்தன் ஆவியே
உந்தன் கண்ணுக்குள் ஆடவா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூற வா

பின்னணி இசை2:

சரணம்1:


பெண்: கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது

ஆண்: பொன்வண்ண மேகங்கள் பேர் சொன்னதா
பூமாலை நான்சூடும் நாள் வந்ததா
நான் நீயன்றோ நீ நானன்றோ

பெண்: எனது மயக்கம் தெளிந்ததா
அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா

ஆண் : அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூற வா

பின்னணி இசை 3 :

சரணம் 2 :

பெண்: காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கைசேர்க்க வந்தது உறவு
காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கைசேர்க்க வந்தது உறவு

ஆண்: சந்திரன் இங்கு சாட்சி உண்டு
சங்கமம் ஆகும் காட்சி உண்டு

பெண்: போ மன்றமே வா நெஞ்சமே

ஆண் புதிய உலகம் பிறந்தது

பெண்: பழைய கனவு மறைந்தது
அன்பு மேகமே இங்கு ஓடிவா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=13212

No comments:

Post a Comment